முந்தையகால ஓய்வூதியம்
ஓய்வூதியம் தொடர்பாக இந்திய நிர்ணய சட்டத்தில் வழங்கப்பட்ட பாதுகாப்பு போன்று
எவ்விதமான அமைப்புகளும் முந்தைய காலங்களில் இல்லை என்றே அறியவருகிறது. மேலும் ஓய்வூதியம் பற்றி விரிவான விளக்கங்கள் இல்லை என்றபோதிலும் "ஜீவிதம்" என்றொரு அமைப்பு இருந்தது என்றும், அத்துடன் பழைய தமிழ் அகராதியில் உபகாரச் சம்பளம், வருஷாமனம், தெளஜி, பரணம் போன்ற சொற்கள் ஓய்வூதியத்திற்கு பதிலாக பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவருகிறது. மேலும் கெளடில்யரின் " அர்த்த சாஸ்திரத்தில்" இருவகையான ஓய்வூதியம் பற்றி குறிப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவைகள் தவிர பண்டைய மன்னர்கள் தங்களின் கீழ் பணியாற்றிய மந்திரிமார்கள் மற்றும் அரசவை உயர் அதிகாரிகளுக்கு பொன், பொருள், வீடு, நிலம் பொன்றவற்றை இனாமாக, அவர்களது வாழ்நாள் முழுதும் அனுபவித்துக் கொள்ள, வழங்கி இருந்தனர் என்பதை வரலாற்று நூல்களின் பல பக்கங்களின் பதிவு செய்யப்பட்டு இறைந்து கிடக்கிறது. அத்துடன் போர் படை தளபதிகள், அவர்களின் கீழ் பணியாற்றிய படை வீரர்கள், போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு, என பலதரப்பட்டவர்களுக்கும் பல கிராமங்கள் தானமளிக்கப்பட்டது. அவைகளை பாளையங்கள் என்றும், உரிமையாளர்களை பாளையக்காரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதும் வரலாற்றின் நெடுகிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் செயல்கள் அனைத்தும் நேரடியாக ஓய்வூதியம் என்ற பெயரில் அழைக்கப்படவில்லையே தவிர, அனைத்தும் ஓய்வூதியம் போல ஒத்திருந்தது என கணக்கில் கொள்ளலாம்.
ஆனால் 16ஆம் நூற்றாண்டில் வெளியான Century Dictionary (Encyclopedia Lexicon) ல் ஏறக்குறைய சரியான வரையறையினை ஓய்வூதித்தின் பால் வெளியிடுகிறது. அரசுப்பணியில் இருந்த பொது அதிகாரிகள், போர்வீரர்கள், கடற்படை வீரர்கள், போன்ற அனைத்து பணியாளர்கள், பணி விடுப்பு பெற்றவர்கள், முழுமையாகவோ அல்லது விபத்தில் காயம்பட்டு உருகுலைந்தவர்கள், அல்லது மரணமடைந்தவர்களின் குடும்பம் போன்றோர்களுக்கு காலாகாலமாக பெற்று வந்த ஊதிய தொகைக்கு நிகரான தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சுருங்க கூறின் "முன்னர் பணியாற்றிய ஒருவருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ முன்னர் ஆற்றிய பணிக்கு ஈடாக வழங்கப்படும் பின்னூதியம்" என கணிக்கலாம்.
மேற் குறிப்பிட்ட விபரங்களை தெளிவாக கவனத்தில் கொண்டு நான்காவது ஊதியக்குழு தனது அறிக்கையில் பத்தி 2 மற்றும் 3 ல் பதிவு செய்தது."நல்ல ஓய்வூதியம் என்பது பணிகாலத்தில் பெற்ற நன்மைகள் போல ஓய்வு காலத்தில் மதிக்கப்படவேண்டும்" என்றும் பிரகடனப்படுத்தியது.
தொடரும்....
பண்டைய தமிழ் மன்னர்கள் புலவர்களுக்கு அளித்துவந்த அன்பளிப்புகளும் ஒரு வகையில் ஓய்வு ஊதியமே.
ReplyDeleteஉண்மை. நன்றி
Deleteவரலாற்று புராணங்களின் உதாரணங்கள் மிக்க நன்று!
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஓய்வு ஊதியமே நமது உயிர் ஓவியம். நன்றி!
ReplyDeleteஇளம் தலைமுறையினர் இதை அறிந்து கொள்ளவில்லை. தங்கள் கருத்துக்கு நன்றி.
DeleteReally interesting details.
ReplyDeleteCarry on.