Thursday, August 19, 2021

அகவிலைப்படி ஏன் தவிர்க்கப்படுகிறது

 தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஓய்வூதியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த அகவிலைப்படி அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்ததுடன், கோபத்தையும் கிளப்பிவிட்டுள்ளது. இன்று தமிழ் நாட்டில் செயல்பட்டு கொண்டுள்ள பல ஓய்வூதியர் சங்கங்கள் தொடர் நடவடிக்கை பற்றி விவாதிப்பதுடன்,முதல்வரின் பதிலுரைக்கு காத்துள்ளது  என்பது நிதர்சனம். நாமும் காத்திருப்போம்.

Wednesday, January 15, 2020

பொங்கலோ பொங்கல்

அனைத்து வாசக நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

Tuesday, December 10, 2019

கருவூல செயல்பாடும், ஓய்வூதியர் எதிர்பார்ப்பும் 1

தமிழ்நாடு அரசின் அனைத்து வகையான வரவு செலவுகளை சரியாக வகைப்படுத்தி கணக்கிட்டு  ஒவ்வோராண்டும் நிதி அறிக்கையினை அரசு சமர்பிக்க அடிப்படையாக செயல்படுகின்ற துறைதான் கருவூலத்துறை. இத்துடன் அனைத்து அரசுபணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் படிகள் மாதா மாதம் வழங்கி அவற்றிற்கான கணக்கினை பேணுவதும் இத்துறையின் அதிமுக்கிய வேலைகளில் ஒன்றாகும். இவைகளுக்கும் மேலான மற்றும்  சிறப்பான பணியாக அரசுப்பணியாளர்கள்  ஓய்வுபெற்ற பின் வழங்கப்படும் ஓய்வூதியம் தொடர்பான அனைத்துப் பணிகளும் இத்துறையின் மூலமாகவே நடைபெறுகிறது. பணியிலுள்ள போது கருவூல அலுவலகங்களுடன் நேரடி தொடர்பு இல்லாதவர்கள் கூட, ஓய்வு பெற்றபின் கருவூல அலுவலக கதவை தட்டியே ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது ஓய்வூதியம் பெறுவதற்காக. அந்த வாசல்படியை மிதிக்கவேமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர்களும் (some pensioners have opted to receive their pension by Public Sector Bank Payment Scheme directly without treasury link. Now Govt scrapped the scheme and directed to maintain all pensioners under pilot scheme of T&A dept) கருவூல அலுவலகம் வரவேண்டியுள்ளது.

இனி ஓய்வூதிய வகைகளைப்பார்ப்போம். 

தமிழகத்தில் அரசுப்பணியாற்றி, 01.04.2003 முன்பு பணியில் சேர்ந்த அனைவரும், ஓய்வு பெறும்போது கீழே குறிக்கப்பட்டுள்ள பகுப்புகளில் ஏதாவது ஒன்றின்கீழ் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள். அவைகள்
1. வயதுமுதிர்வு ஓய்வு (Superannuation)
2. தன் விருப்ப ஓய்வு ( Voluntary)
3. மருத்துவ ஓய்வு (Medical invalid)
4. கட்டாய ஓய்வு (Compulsory)

மேல் குறிப்பிட்ட பிரிவுகள் அனைத்திலும் ஓய்வு, ஓய்வு என்று குறிப்பிட்டுள்ளதால் இவைகளில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்று கருத்தில் கொள்ளலாகாது. ஒவ்வொரு பிரிவும் தன்னுடைய தனித்த அடையாளத்தில் நிலைகொண்டுள்ளது என்பதே உண்மை. ஆகவே ஒவ்வொன்றாக விவரித்துப்பார்ப்போம்.

1.வயது முதிர்வு ஓய்வு:

உயர்ந்த பட்சமாக 58 வயது வரை பணியாற்றி வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுபவர்களை superannuation Pensioner என அழைக்கப்படுவர். முழு ஓய்வூதியம் பெறுவதற்கு 30 ஆண்டுகள் பணி முடித்திருந்தால் போதும் என்றும் முழு பணிக்கொடை பெறுவதற்கு 33 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் என்பதும் விதியாகும். இவர்களை Subordinate service என்று அழைக்கப்படுவார்கள். வேறு பணியாளர்களில் பலர் 60 வயது வரையிலும் பணியாற்றுவார்கள் இவர்களை Inferior service என வகைப்படுத்தி உள்ளார்கள். ஆனால் எப்பிரிவிலும் உள்ள பணியாளர்கள் இறுதியில் பெறும் ஊதியத்தில் பாதி, அதாவது முழு ஓய்வூதியம் பெறுவதற்கு 30ஆண்டுகள் பிழையில்லா பணி (Qualifying service) முடித்திருக்கவேண்டும். குறைவான காலம் பணிமுடித்தவர்கள் அதற்கீடான குறைந்த அளவே ஓய்வூதியம் பெறுவார்கள். 18வயதிற்கு முன்னமே பணியில் இணைந்தவர்கள் முந்தைய ஆண்டுகளை குழந்தை பணி(Boyhood service) என கணக்கிட்டு பிழையில்லா பணிக்காலத்திலிருந்து கழிக்கப்படும். 
பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றுகின்ற பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் 65 மற்றும் 67 வயதுவரை பணியாற்றிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஓய்வூதிப்பலன்கள் அனைத்தும் (UGC) பல்கலை மானியக்குழுவின் வழிகாட்டுதல் படி வழங்கப்படுகிறது. ஆகவே நாம் ஆழமாக இதனை கணக்கில் கொண்டு விவரிக்க வேண்டாம்.

தொடரும்.....